பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

எனது குறுங்கவிதைகள் இங்கே.......................



இன்னும் சில நட்புக் கவிதைகள்

சக்கரத்தின் கம்பிகளில்
தொங்கிக்கொண்டு சுழலும்
உன்னை என் நட்பென்ற
சுழியாலே காத்திடுவேன்..
நீ சிரித்திடுவாய்..


ரசத்தின் காரம் மிகும்போது
சிரம் தட்டுவாய் நண்பனே!
அந்த அதிர்ந்த ஒலியிலும்
கலந்து இருப்பேன் நட்பாக...


நீ அள்ளிய மணற்துகள்களிலும்
பருகிய நீர் நிலைகளிலும்
நெகிழ்ந்த நெருப்புக் கனலிலும்
ஆகாயத்தின் பிரவேசத்திலும்
கலந்து இருப்பேன் உன் தோழியாக...


நெருக்கமான இலைகளின் மத்தியில்
அமர்ந்து ஆடிக் காற்றில்
ஆனந்தமாய் ஆடும் தெய்வீகம்
உனக்கும் எனக்குமான நட்பு


ஒரு தள்ளாட்டத்தில்
உன் கைகளைப் பற்றி
ஊன்றுகோலாய் உன் கால்களாய் மாறும்
என் நிலையா உண்மையான நட்பு
என்று சொல்கிறாய்?....


நவீன ஓவியத்தின் தந்தையும்
குழம்பும் நவீன ஓவியம்
நம் நவீன நட்பு..


ஓர் நட்புக் குடுவையில்
ஹைட்ரஜனாக மிதக்கிறேன்..
நீ  இல்லாவிடில் பறந்திருப்பேன்
ஒரு பலூனாக...

தோட்டத்தில் இரைத்துவிட்ட
பூக்களாய் என் நட்பு இரைந்துகிடக்கிறது.
ஒவ்வொன்றாய் எடுத்து
உன் இதயத்தில் பொருத்து.
இறுதி வரும் முன்னே
மீண்டும் இரைக்கச் சொல்வேன்
நட்பென்ற மரத்தை..


விண்ணில் ஒளிர்ந்துகொண்டு இருக்கிறாய்
ஏதாவது ஒரு நட்சத்திரமாக
ஒவ்வொன்றாக துலாவுகிறேன்
நீ எங்கே என்று.
நான் ஒரு பைத்தியக்காரி..
என் பின்னே நீ வால்நட்சத்திரமாய்
சுற்றுவதை அறியாமல் போகிறேனே!


தேனில் குழைத்த ஒரு மயிலிறகின்
இழைகளை நீ தந்த மாத்திரம்
என் புத்தகத்தில்
ஒளித்து வைத்திருப்பேன்
ஒவ்வொருமுறையும் திறக்கும் போது
நெடியுடன் உன் நினைவும் தாலாட்டும்..

உடைந்து போன குயில்
உன்னை அழைத்து பாட சொல்கிறதா?
தனக்குரிய தனிச்சிறப்பை கொக்கு
தவிக்கவிட்டு உன்னிடம் தேடுகிறதா?
நொடிந்துபோன மயில்
உன்னை அழைத்து ஆடச் சொல்கிறதா?
என்னை மட்டுமே நினை!
நட்பின் சிறப்பும் அதுதான்.


மேகங்கள் என்னிடம் கேட்டன
அவன் உன் தோழனா?
மின்னல்கள் என்னிடம் கேட்டன
அவன் உன் காதலனா?
இடியும் மழையும் இணைந்து கேட்டது
அவன் உன் கணவனா?
என்னிடம் வார்த்தை இல்லை
இந்த ஜடங்களுக்கு பதில்சொல்ல..

கொய்தது பிச்சி @ 6:51 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்